என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபிநாதம்பட்டி அருகே கூலித்தொழிலாளி மனைவி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்31 July 2019 2:51 PM GMT (Updated: 31 July 2019 2:51 PM GMT)
கோபிநாதம்பட்டி அருகே மாமியார் திட்டியதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சுகந்தா (வயது23). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கூலித்தொழிலாளியான மாரியப்பன் வேலைக்காக கேரளா மாநிலத்திற்கு சென்று விட்டார். வீட்டில் சுகந்தாவும், அவரது மாமியார் சாந்தியும் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் சாந்தி அடிக்கடி சுகந்தாவை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட சுகந்தா சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் சுகந்தா பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X