என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் பகுதியில் எள் அறுவடை பணிகள் தீவிரம்
Byமாலை மலர்31 July 2019 10:37 AM GMT (Updated: 31 July 2019 10:37 AM GMT)
கூடலூர் பகுதியில் எள் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:
கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான ஏகலூத்து, கல்உடைச்சான்பாறை, பெருமாள்கோவில்புலம், கழுதைமேடு, பளியன்குடி, புதுரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாயிகள் கடந்த பங்குனி மாதம் நிலக்கடலை, எள், தட்டைப்பயிறு, அவரை, மொச்சை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து இருந்தனர். குறிப்பாக அதிக பரப்பளவில் எள் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
எள் பயிர் பூக்கள் விடத் தொடங்கியதும் விவசாயிகள் களை எடுத்தும், மருந்துகள் தெளித்தும் எள் பயிரை நன்கு பராமரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர் பகுதிகளில் எள் அறுவடைப் பணி தொடங்கி உள்ளது. அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை டிராக்டர் வண்டிகள் மூலம் களத்துமேட்டு பகுதிகளுக்கு கொண்டுவந்து வெயிலில் உலர்த்தி வருகின்றனர்.
பின் செடிகளில் இருந்து எள்ளை தனியாக பிரித்து கழிவுகளை நீக்கி காற்றில் விட்டு சுத்தம் செய்கின்றனர். 100 கிலோ கொண்ட 1 எடை எள் (குவிண்டால்) ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ 15 ஆயிரத்து 500 வரை விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டு 1 குவிண்டால் எள் மூட்டை ரூ.10 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த ஆண்டு விவசாயிகள் எதிர்பார்த்த தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் எள் மகசூல் (விளைச்சல்) குறைந்தளவே உள்ளது.
இதனால் இதன் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருந்து எண்ணெய் வித்துப்பொருட்களான எள், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய பயிர்களை உற்பத்தி செய்வதில் கூடலூர் பகுதி விவசாயிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான ஏகலூத்து, கல்உடைச்சான்பாறை, பெருமாள்கோவில்புலம், கழுதைமேடு, பளியன்குடி, புதுரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாயிகள் கடந்த பங்குனி மாதம் நிலக்கடலை, எள், தட்டைப்பயிறு, அவரை, மொச்சை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து இருந்தனர். குறிப்பாக அதிக பரப்பளவில் எள் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
எள் பயிர் பூக்கள் விடத் தொடங்கியதும் விவசாயிகள் களை எடுத்தும், மருந்துகள் தெளித்தும் எள் பயிரை நன்கு பராமரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர் பகுதிகளில் எள் அறுவடைப் பணி தொடங்கி உள்ளது. அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை டிராக்டர் வண்டிகள் மூலம் களத்துமேட்டு பகுதிகளுக்கு கொண்டுவந்து வெயிலில் உலர்த்தி வருகின்றனர்.
பின் செடிகளில் இருந்து எள்ளை தனியாக பிரித்து கழிவுகளை நீக்கி காற்றில் விட்டு சுத்தம் செய்கின்றனர். 100 கிலோ கொண்ட 1 எடை எள் (குவிண்டால்) ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ 15 ஆயிரத்து 500 வரை விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டு 1 குவிண்டால் எள் மூட்டை ரூ.10 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த ஆண்டு விவசாயிகள் எதிர்பார்த்த தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் எள் மகசூல் (விளைச்சல்) குறைந்தளவே உள்ளது.
இதனால் இதன் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருந்து எண்ணெய் வித்துப்பொருட்களான எள், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய பயிர்களை உற்பத்தி செய்வதில் கூடலூர் பகுதி விவசாயிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X