என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்31 July 2019 10:22 AM GMT (Updated: 31 July 2019 10:22 AM GMT)
பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்ற 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 25). இவர் சம்பவத்தன்று பொள்ளாச்சி தெப்பக்குளம் தெருவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் பொள்ளாச்சி கிழக்கு இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நாகராஜை மறித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவருடைய இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் இருகூர் மேம்பாலம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக வந்த எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அஜய்குமார்(22), அண்ணாமலை (19) மற்றும் 17 வயது வாலிபரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X