என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கம்பம் அருகே காய்கறி வியாபாரியை தாக்கி பணம் பறித்த மெக்கானிக் கைது
கம்பம்:
கம்பம்மெட்டு மலையடிவாரத்தில் கடந்த மாதம் 6ம் தேதி சேற்றுக் குழியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஜெயன்(47) மற்றும் அவரது நண்பரான ரிஜி(46) ஆகியோர் வந்த வண்டியை மறித்து ஒரு கும்பல் அவர்களை தாக்கி செல்போன் மற்றும் ரூபாய் 8 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து ஜெயன் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தேனி எஸ்பி பாஸ்கரன் உத்தமபாளையம் டிஎஸ்பி வீரபாண்டியிடம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் பொன்னி வளவன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார்கள் மற்றும் தனிப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் போடியைச் சேர்ந்தவரும் தற்போது கம்பம் புது பஸ்டாண்டு தெருவில் வசித்து வரும் பாரூக் மகன் அஜித்ரகுமான் (30). மெக்கானிக். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டி ருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் நேற்று கம்பம் புது பஸ்டாண்டு பகுதியில் தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ்டாண்டில் நின்றிருந்த அஜித்ரகுமானை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்,
கடந்த மாதம் கம்பமெட்டு மலையடிவாரத்தில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்