search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகருக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் கைது

    புழலில் உள்ள அகதிகள் முகாமில் நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    செங்குன்றம்:

    புழலில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வருபவர் உமாசங்கர். (32). இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். இதே முகாமில் வசித்து வருபவர் ரோ‌ஷன் இவர் விஜய் ரசிகர்.

    நண்பர்களான இருவரும் முகாம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது உமாசங்கர், நடிகர் விஜயை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரோ‌ஷன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உமா சங்கரை தலை, தோள்பட்டை, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த உமாசங்கர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    அவரை முகாமில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உமா சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் ரசிகர் ரோ‌ஷனை கைது செய்தனர். அவரை திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×