என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகருக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் கைது
Byமாலை மலர்31 July 2019 6:38 AM GMT (Updated: 31 July 2019 6:38 AM GMT)
புழலில் உள்ள அகதிகள் முகாமில் நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்:
புழலில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வருபவர் உமாசங்கர். (32). இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். இதே முகாமில் வசித்து வருபவர் ரோஷன் இவர் விஜய் ரசிகர்.
நண்பர்களான இருவரும் முகாம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது உமாசங்கர், நடிகர் விஜயை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரோஷன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உமா சங்கரை தலை, தோள்பட்டை, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த உமாசங்கர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அவரை முகாமில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உமா சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் ரசிகர் ரோஷனை கைது செய்தனர். அவரை திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புழலில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வருபவர் உமாசங்கர். (32). இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். இதே முகாமில் வசித்து வருபவர் ரோஷன் இவர் விஜய் ரசிகர்.
நண்பர்களான இருவரும் முகாம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது உமாசங்கர், நடிகர் விஜயை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரோஷன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உமா சங்கரை தலை, தோள்பட்டை, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த உமாசங்கர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அவரை முகாமில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உமா சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் ரசிகர் ரோஷனை கைது செய்தனர். அவரை திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X