என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கீழக்கரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவ மனைக்கு பல்வேறு கிரமங்களிலிருந்தும் நாள் தோறும் 400-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
முறையான சிகிச்சையும் கிடைப்பதால் நோயாளிகள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
டாக்டர் ஜவாஹிர் உசேன் தலைமையில் 2 பெண் பொது மருத்துவர்கள் உட்பட 7 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் 2 அல்லது 3 பேர் விடுமுறையில் சென்று விடுகின்றனர்.
கடந்த ஒரு வருடமாக மகப்பேறு மருத்துவர் இங்கு பணிபுரிந்து வந்தார். இதனால் கர்ப்பிணி பெண்கள் முறையான சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் மகப்பேறு மருத்துவரை சில தினங்களுக்கு முன் வேறு மருத்துவ மனைக்கு மாற்றம் செய்து விட்டதால் அந்தப் பணியிடம் காலியாக உள்ளது.
இதனால் கர்ப்பிணி பெண்கள் முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.
ஆகவே நிரந்தர மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்