search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    சென்னையில் சாலைகளை சீரமைக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

    பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அரசு உடனடியாக சாலை சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்தி, சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தே. மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போரூர்-குன்றத்தூர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், பல்வேறு விபத்துக்கள் நடந்து வருகிறது. நான் குடியிருக்கும் சாலிகிராமம் பகுதியிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. 6 மாத காலத்துக்கு மேலாக இந்த நிலையே இருந்தும், அதில் அரசு கவனம் செலுத்தாமல் கவனக்குறைவாக இருப்பது பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது. மழைக்காலம் தொடங்கியிருப்பதால் சேறும், சகதியுமாக மாறி சாலைகள் பயணிக்கவே இயலாத நிலையில் உள்ளது.

    எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அரசு உடனடியாக சாலை சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்தி, அனைத்து பகுதிகளிலும் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு சாலைகளை சீரமைக்க வேண்டும். சட்டப்பேரவையில் சென்னை முழுவதும் சாலை பாதுகாப்பு பணிக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.300 கோடியும், தமிழகம் முழுவதும் சாலை சீரமைப்பு செய்வதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.1,000 கோடியும் அறிவித்ததை பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டுவந்து, பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×