என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
கோவை:
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள கலைஞர் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தேவி (31). இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்ட தேவி அவரை பிரிந்து மலுமிச்சம்பட்டியில் தனது தாய் வீட்டில் கடந்த 1 வாரமாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று அங்கு சென்ற கருப்பசாமி , தேவியை தன்னுடன் வந்து சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தேவியின் இடது பக்க வயிற்றில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். இதனை பார்த்த கருப்பசாமி அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தேவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திய கருப்பசாமியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் பிரேம்குமார் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவர் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள சக்தி நகரில் அறை எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். நேற்று அறையில் இருந்த இவர் தனது தாயிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இது அவருடன் அறையில் தங்கி இருந்த கதிர்வேல் என்பவருக்கு தொந்தரவை ஏற்படுத்தியது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் கொஞ்சம் தள்ளி சென்று போன் பேசுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கதிர்வேல் அங்கு இருந்த கத்தியை எடுத்து பிரேம்குமாரின் கழுத்து மற்றும் நெஞ்சில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்னர் கதிர்வேல் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பிரேம்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்