search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கயத்தாறு அருகே தூக்குபோட்டு விவசாயி தற்கொலை

    கயத்தாறு அருகே 6 மாதகாலமாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள சவலாப் பேரியை சேர்ந்தவர் சீனிப்பாண்டி (வயது 60), விவசாயி. இவரது மனைவி வேல்தாய். இவர்களுக்கு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். 

    கடந்த 6 மாதகாலமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த சீனிப்பாண்டி வெளியே எங்கும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்தவர் இன்று அதிகாலை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சீனிப்பாண்டி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×