search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயின் பறிப்பு
    X
    செயின் பறிப்பு

    நாகமலை புதுக்கோட்டை அருகே பட்டதாரி பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

    பட்டதாரி பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்து சென்ற கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    நாகமலை புதுக்கோட்டையை அடுத்த ராமக்குளத்தை சேர்ந்த செல்வகுமார் மனைவி வர்ஷிதா (வயது 37) பட்டதாரி. இவர் நேற்று மதியம் நேர்முக தேர்வுக்காக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு சென்றார்.

    தேனி-மதுரை மெயின் ரோட்டில் ஒரு மர்ம பைக் பின் தொடர்ந்து வந்தது. அதில் அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் இருந்தனர்.

    அங்குள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த மர்ம நபர் வர்ஷிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இது தொடர்பாக வர்ஷிதா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×