என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் அருகே இளம் பெண்ணை கடத்தி திருமணம்
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட முத்தையன்பட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி அன்ன பெருமாயி. இவர்களது மகள் சுருதி (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ள இவர் மேற்படிப்பு படிக்காமல் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுருதி திடீரென மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். பலனில்லை.
இந்த நிலையில் சிந்துப்பட்டி போலீசில் அன்னபெருமாயி புகார் கொடுத்துள்ளார். அதில், எனது மகளை மதுரை தத்தனேரி காமாட்சி நகரைச் சேர்ந்த மனோகரன் மகன் முத்தையா (20) என்பவர் கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் மதுரையில் இருந்த சுருதியை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முத்தையா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்