search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நீதி மய்யம்
    X
    மக்கள் நீதி மய்யம்

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் புதிய பொறுப்புகள்

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்டத்துக்கு 15 பேர் என புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வந்துள்ளார்.

    கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அகில இந்திய அளவில் பிரபலமான தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் கை கோர்த்துள்ளார். அவரது ஆலோசனைப்படி கட்சியின் அடிப்படை கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

    இதன் முதல்கட்டமாக கட்சியை மாவட்டம் தோறும் விரிவுபடுத்தும் வகையில் நேற்று சென்னையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெற்றது.

    கட்சி தலைவர் கமல்ஹாசன், துணை தலைவர் மகேந்திரன் உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், சில புது கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட தலைவர் 1, செயலாளர் 3 பேர், இணை செயலாளர் 6 பேர் , துணை செயலாளர் 6 பேர் மாவட்ட பொருளாளர் 1 செயற்குழு உறுப்பினர்கள் 15 பேர் என புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்க்க முடியும் என்று மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
    Next Story
    ×