என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி
Byமாலை மலர்25 July 2019 11:11 AM GMT (Updated: 25 July 2019 11:11 AM GMT)
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் பகுதியை சேர்ந்தவர் சுப்பன். இவரது மகள் தேவி(வயது 42). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
சுப்பனுக்கு சொந்தமாக தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தேவி தினமும் தேயிலை பறிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த தோட்டம் வனப்பகுதி அருகே உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து விடும்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் தேவி தேயிலை பறித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டெருமை ஒன்று தேவியை தாக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரேஞ்சர் சீனிவாசன், வனவர் முருகன், வனகாப்பாளர் வீரமணி மற்றும் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் பகுதியை சேர்ந்தவர் சுப்பன். இவரது மகள் தேவி(வயது 42). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
சுப்பனுக்கு சொந்தமாக தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தேவி தினமும் தேயிலை பறிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த தோட்டம் வனப்பகுதி அருகே உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து விடும்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் தேவி தேயிலை பறித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டெருமை ஒன்று தேவியை தாக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரேஞ்சர் சீனிவாசன், வனவர் முருகன், வனகாப்பாளர் வீரமணி மற்றும் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X