என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடத்தூர் அருகே அடிதடியில் ஈடுபட்ட அண்ணன்: தம்பி கைது
Byமாலை மலர்24 July 2019 4:24 PM GMT (Updated: 24 July 2019 4:24 PM GMT)
கடத்தூர் அருகே விவசாய நிலத்திற்கு செல்வதில் ஏற்பட்ட வழிப்பிரச்சினையில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர்:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் சில்லாரஹள்ளியை சேர்ந்தவர் மாதையன் (வயது 49). இவரது தம்பி பச்சையப்பன் (வயது 40) ஆகும்.
இவர்கள் இருவருக்கும் விவசாய நிலத்திற்கு செல்வதில் வழிப்பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 19-ந்தேதி அன்று மாலை நேரத்தில் பச்சையப்பன் மாதையன் தோட்டத்து வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரைத் தடுத்து நிறுத்திய மாதையன் இந்த வழியாக உனக்கு வழிஇல்லை. இதில் ஏன் வருகிறாய் என்றுகூறி தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் அடிபட்டது.
காயம் அடைந்த மாதையன் தருமபுரி அரசு மருத்துவமனையிலும், பச்சையப்பன் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துமனையிலும் சிகிச்சை பெற்றனர். பின்னர், இதுகுறித்து மாதையன் கொடுத்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X