என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் கலெக்டர் ஆபிஸ் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
Byமாலை மலர்24 July 2019 11:26 AM GMT (Updated: 24 July 2019 11:26 AM GMT)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் ஆபிஸ் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வெஸ்டர்ன் கழிப்பறை, லிப்ட் வசதி, சர்க்கரநாற்காலி வசதி செய்து தரவேண்டும். மாற்றுததிறனாளிகளுக்கு நிபந்தனையின்றி வங்கிக்கடன் வழங்கவேண்டும். அரசு அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் சாய்வு தள வசதி, வாகன பார்க்கிங் வசதி செய்து தரவேண்டும். திண்டுக்கல் பஸ்நிலையம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் மாவட்ட செயலாளர் பகத்சிங் முன்னிலையில் நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ஊனமுற்றோர் நல அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றத்திருவதாக அவர் தெரிவித்த நிபந்தனையை ஏற்காமல் உடனடியாக தங்களது கோரிக்கைகளை ஏற்கவேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வெஸ்டர்ன் கழிப்பறை, லிப்ட் வசதி, சர்க்கரநாற்காலி வசதி செய்து தரவேண்டும். மாற்றுததிறனாளிகளுக்கு நிபந்தனையின்றி வங்கிக்கடன் வழங்கவேண்டும். அரசு அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் சாய்வு தள வசதி, வாகன பார்க்கிங் வசதி செய்து தரவேண்டும். திண்டுக்கல் பஸ்நிலையம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் மாவட்ட செயலாளர் பகத்சிங் முன்னிலையில் நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ஊனமுற்றோர் நல அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றத்திருவதாக அவர் தெரிவித்த நிபந்தனையை ஏற்காமல் உடனடியாக தங்களது கோரிக்கைகளை ஏற்கவேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X