search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரைவர் தாக்குதல்
    X
    டிரைவர் தாக்குதல்

    சாத்தான்குளம் அருகே கார் டிரைவர் மீது தாக்குதல்

    சாத்தான்குளம் அருகே கார் டிரைவரை தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் துரைசிங் (வயது42). இவரது மனைவி சந்திரா. அதே பகுதியை சேர்ந்தவர் ஏசா மகன் பாஸ்கர். இருவரும் கார் டிரைவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைசிங் மனைவி சந்திரா காணாமல் போய் விட்டார்.

    இதற்கு பாஸ்கர்தான் காரணம் என்று துரைசிங் சந்தேகித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அவ்வழியாக வந்த பாஸ்கரை வழிமறித்து துரைசிங் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதும் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், துரை சிங்கை பலமாக தாக்கினார்.

    இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து துரைசிங் அளித்த புகாரின் பேரில் சாத்தான் குளம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×