search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    திருச்சி துவாக்குடி பகுதியில் நாளை மின்தடை

    திருச்சி துவாக்குடி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9. 45 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    திருச்சி:

    திருச்சி வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன். இதனால் நாளை 25ம் தேதி காலை 9.45 மணிமுதல் பகல் 2மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருச்சி மன்னார்புரம் மின் வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார். 

    அதன்படி ஜெய்நகர், திருவேங்கட நகர், கணேசபுரம், கணபதி நகர், பெல்டவுன்‌ஷப்பில் சி செக்டாரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வஉசி. நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    Next Story
    ×