என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே வேடபட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ஜோஸ்பின் ஹேமா (வயது 35). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 18-ந்தேதி மர்ம நபர்கள் 2 பேர் கடையில் இருந்த ஜோஸ்பின் ஹேமாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலிசார் நேற்று தோமையார்புரம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் சவேரியார் பாளையத்தைச் சேர்ந்த ரீகன் (29) என்பதும், ஜோஸ்பின் ஹேமாவின் சங்கிலியை பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து ரீகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மற்றொரு நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்