search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    பார்வையற்ற 7 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை- முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

    7 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அரசு அச்சகங்களில் இளநிலை புத்தகம் கட்டுநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
    சென்னை:

    பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த 7 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அரசு அச்சகங்களில் இளநிலை புத்தகம் கட்டுநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

    அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் கார்த்திக், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநர் தண்டபாணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×