search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - வாலிபர் கைது

    கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள மொட்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 22-ந்தேதி அன்று மாணவி மொட்டனூர் ஏரிக்கரையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தட்டரஅள்ளியை சேர்ந்த சின்னசாமி மகன் ராஜ்குமார் (வயது26) என்பவர் வழிமறித்து மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த மாணவி கூச்சலிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து ராஜ்குமார் தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×