search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் எரிசாராயம் கடத்தல் - 2 பேர் கைது

    கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் எரிசாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடி உள்ளது. இன்று அதிகாலை அங்கு திருச்சி, மதுரையை சேர்ந்த மத்திய புலனாய்வு பிரிவு மதுவிலக்கு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது உருளைக் கிழங்கு மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை சோதனையிட்டனர். அதில் மூட்டைகளுக்கு கீழ் 500 கேன்களில் எரிசாராயம் மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து லாரியில் இருந்த டிரைவர்களான பாண்டிச்சேரியை சேர்ந்த சூசைராஜ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த சத்யராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    லாரியுடன் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 17 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் இருந்தது.அரியானா மாநிலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு எரிசாராயத்தை கடத்தி சென்றதாக கைதான 2 பேரும் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×