என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் எரிசாராயம் கடத்தல் - 2 பேர் கைது
Byமாலை மலர்24 July 2019 6:14 AM GMT (Updated: 24 July 2019 6:14 AM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் எரிசாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடி உள்ளது. இன்று அதிகாலை அங்கு திருச்சி, மதுரையை சேர்ந்த மத்திய புலனாய்வு பிரிவு மதுவிலக்கு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உருளைக் கிழங்கு மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை சோதனையிட்டனர். அதில் மூட்டைகளுக்கு கீழ் 500 கேன்களில் எரிசாராயம் மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து லாரியில் இருந்த டிரைவர்களான பாண்டிச்சேரியை சேர்ந்த சூசைராஜ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த சத்யராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
லாரியுடன் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 17 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் இருந்தது.அரியானா மாநிலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு எரிசாராயத்தை கடத்தி சென்றதாக கைதான 2 பேரும் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X