search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற காட்சி
    X
    விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற காட்சி

    இயற்கையை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

    மோகனூர் அருகே அருவங்காட்டுபுதூரில் உள்ள ஸ்ரீ செந்தூர் இன்டர்நேசனல் பள்ளி சார்பில் இயற்கையை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    மோகனூர்:

    மோகனூர் அருகே அருவங்காட்டுபுதூரில் உள்ள ஸ்ரீ செந்தூர் இன்டர்நேசனல் பள்ளி சார்பில் இயற்கையை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் ராஜேஸ்வரி ரகு தலைமை தாங்கினார். ஒன்றிய அலுவலகம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்தை மோகனூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் இயற்கையை காப்போம் என கோஷமிட்டும், விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் சென்றனர். ஊர்வலத்தின் போது 50 ஆயிரம் விதை பந்துகளை பொதுமக்களிடம் வழங்கி அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என விளக்கி கூறினர். இதில் பள்ளி முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×