search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் பழனிசாமி
    X
    முதலமைச்சர் பழனிசாமி

    ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

    ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
    சென்னை:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், கடந்த 23 நாட்களாக அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கு வந்த முதலமைச்சர் பழனிசாமி  அத்திவரதரை தரிசனம் செய்தார்.

    கோவிலில் பட்டாச்சார்யர்கள் பூர்ணகும்ப மரியாதை அளித்தனர். தொடர்ந்து  அத்திவரதர் உற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  

    அத்திவரதர்

    ஆய்வு மேற்கொண்ட பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பக்தர்கள் வசதிக்காக 1,250 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படும். அத்திவரதர் தரிசனத்திற்காக இதுவரை 3.41 லட்சம் வாகனங்கள் காஞ்சிபுரம் வந்துள்ளன. நிழற் கூடம், மருத்துவ முகாம், காவல் உதவி மையங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×