என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் அரிவாளை காட்டி மிரட்டி பணம்-செல்போன்கள் கொள்ளை
மதுரை:
மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (வயது 36). இவர் ஜெய்ஹிந்துபுரம் 2-வது ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எம்.கே.புரம் மெயின் ரோட்டைச் சேர்ந்த பூமிநாதன் மகன் ஆதிபரமேஸ்வரன் (22) என்பவர் ஜோதியை மறித்து கஞ்சா வாங்க பணம் தருமாறு மிரட்டினார். ஆனால் ஜோதி பணம் தர மறுத்து விட்டார்.
இதையடுத்து ஆதிபர மேஸ்வரன் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.800-யை பறித்துக்கொண்டு தப்பினான். இது குறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிபரமேஸ்வரனை கைது செய்தனர்.
உத்தங்குடி உலகனேரியைச் சேர்ந்தவர் அஸ்வின் குமார். இவர் கபீர்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது தனக்கன் குளத்தைச் சேர்ந்த செல்வ பிரகாஷ் (20), ஆண்டார் கொட்டாரம் லட்சுமணன் (20), புதூர் அஜித் (20) ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அஸ்வின்குமாரை மிரட்டி அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறித்துச் சென்றனர். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்