search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் அரிவாளை காட்டி மிரட்டி பணம்-செல்போன்கள் கொள்ளை

    மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் அரிவாளை காட்டி மிரட்டி பணம்-செல்போன்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (வயது 36). இவர் ஜெய்ஹிந்துபுரம் 2-வது ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எம்.கே.புரம் மெயின் ரோட்டைச் சேர்ந்த பூமிநாதன் மகன் ஆதிபரமேஸ்வரன் (22) என்பவர் ஜோதியை மறித்து கஞ்சா வாங்க பணம் தருமாறு மிரட்டினார். ஆனால் ஜோதி பணம் தர மறுத்து விட்டார்.

    இதையடுத்து ஆதிபர மேஸ்வரன் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.800-யை பறித்துக்கொண்டு தப்பினான். இது குறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிபரமேஸ்வரனை கைது செய்தனர்.

    உத்தங்குடி உலகனேரியைச் சேர்ந்தவர் அஸ்வின் குமார். இவர் கபீர்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தனக்கன் குளத்தைச் சேர்ந்த செல்வ பிரகாஷ் (20), ஆண்டார் கொட்டாரம் லட்சுமணன் (20), புதூர் அஜித் (20) ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அஸ்வின்குமாரை மிரட்டி அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறித்துச் சென்றனர். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×