என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செய்யாறு அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
Byமாலை மலர்23 July 2019 11:09 AM GMT (Updated: 23 July 2019 11:09 AM GMT)
செய்யாறு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள வடதண்டலம் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து டேங்க் ஆப்ரேட்டரிடம் கேட்டபோது பைப்-லைன் உடைந்துள்ளது. மோட்டார் பழுதடைந்து உள்ளது என அலட்சியமாக பதில் கூறி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை செய்யாறு- ஆரணி செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது டேங்க் ஆப்ரேட்டர் முறையான பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்துகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என ஆவேசமாக பொதுமக்கள் கூறினர்.
இன்று மாலைக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்யாறு அருகே உள்ள வடதண்டலம் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து டேங்க் ஆப்ரேட்டரிடம் கேட்டபோது பைப்-லைன் உடைந்துள்ளது. மோட்டார் பழுதடைந்து உள்ளது என அலட்சியமாக பதில் கூறி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை செய்யாறு- ஆரணி செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது டேங்க் ஆப்ரேட்டர் முறையான பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்துகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என ஆவேசமாக பொதுமக்கள் கூறினர்.
இன்று மாலைக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X