என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
Byமாலை மலர்23 July 2019 9:50 AM GMT (Updated: 23 July 2019 9:50 AM GMT)
ஒரத்தநாடு அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 45). இவர் தனது வீட்டில் முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கும் குடிசை தொழில் செய்து வந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் இவரது வீடு சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சேதமாகின. குடிசை தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தொழிலை மீட்டெடுக்க பல இடங்களில் கடன் வாங்கினார். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்தார். வாழ்க்கையில் விரக்தியடைந்த பூபதி வீட்டின் பின்புறம் சென்று விஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பூபதி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 45). இவர் தனது வீட்டில் முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கும் குடிசை தொழில் செய்து வந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் இவரது வீடு சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சேதமாகின. குடிசை தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தொழிலை மீட்டெடுக்க பல இடங்களில் கடன் வாங்கினார். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்தார். வாழ்க்கையில் விரக்தியடைந்த பூபதி வீட்டின் பின்புறம் சென்று விஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பூபதி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X