search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 4 பேரை படத்தில் காணலாம்.
    X
    கைதான 4 பேரை படத்தில் காணலாம்.

    திருவள்ளூர் அருகே கோஷ்டி மோதல்- 5 பேருக்கு வெட்டு

    திருவள்ளூர் அருகே இரு தரப்பினருக்கு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேரை கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பாப்பரம்பாக்கத்தில் வாரச் சந்தை நடந்தது. வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்களும், வெங்கத்தர் கிராமத்தை சேர்ந்தவர்களும் 2 கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர்.

    இதையடுத்து வெங்கத்தூர் காலனியைச் சேர்ந்த 9 பேர் கொண்ட கும்பல் வலசை வெட்டிக்காடு கிராமத்திற்கு சென்று தேவேந்திரன், சதீஷ், கோவிந்தராஜ், பிரபாகரன் ஆகிய 5 பேரை கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மணவாள நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தார்.

    அப்போது கிராமத்திற்குள் புகுந்து 5 பேரை வெட்டிய வெங்கத்தூர் காலணியை சேர்ந்த முனுசாமி(27), தினேஷ்குமார்(23), அன்பரசன்(23), பிரகாஷ்(24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தறைமறைவான 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×