search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    திருவள்ளூர் அருகே இலவச லேப்-டாப் கேட்டு மாணவிகள் மறியல்

    திருவள்ளூர் அருகே இன்று காலை இலவச லேப்-டாப் வழங்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு கூட்டுச்சாலை அருகே அரசு நிதி உதவி பெறும் பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பிளஸ்-1, பிளஸ்-2 வில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்க 180 இலவச லேப்டாப் மட்டுமே கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை மப்பேடு கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மப்பேடு போலீசார் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக தெரிவித்தனர்.
    Next Story
    ×