என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் பொருட்கள் வழங்குவதில் எந்த மாற்றமும் கிடையாது - அமைச்சர் காமராஜ்
Byமாலை மலர்23 July 2019 3:15 AM GMT (Updated: 23 July 2019 3:15 AM GMT)
வதந்திகளை நம்ப வேண்டாம். ரேஷன் பொருட்களை வழங்குவதில் எந்த மாற்றமும் கிடையாது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டையில் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடு இல்லாத தகுதியுள்ளவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்-அமைச்சர் கூறியதை செயல்படுத்தும் வகையில் இதுவரை 8 ஆயிரத்து 300 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை, நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் 5 வருடங்களுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு வகைமாற்றம் செய்வது, வேறு இடத்தில் வீடுகட்டி கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தகுதி உள்ளவர்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
பொதுவினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பழைய முறையே பின்பற்றப்படும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டையில் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடு இல்லாத தகுதியுள்ளவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்-அமைச்சர் கூறியதை செயல்படுத்தும் வகையில் இதுவரை 8 ஆயிரத்து 300 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை, நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் 5 வருடங்களுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு வகைமாற்றம் செய்வது, வேறு இடத்தில் வீடுகட்டி கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தகுதி உள்ளவர்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
பொதுவினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பழைய முறையே பின்பற்றப்படும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X