search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பு
    X
    பாம்பு

    சாத்தான்குளம் அருகே பாம்பு கடித்து பெண் பலி

    சாத்தான்குளம் அருகே கோழி முட்டை எடுக்க கூட்டுக்குள் கையை விட்ட போது பாம்பு கடித்து பெண் பலியானார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள துலர்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார், ஐஸ் வியாபாரி. இவரது மனைவி பொன்ராணி (வயது50). இவர் வீட்டு தோட்டத்தில் கோழி வளர்த்து வந்தார். நேற்று கோழி முட்டை எடுக்க கூட்டுக்குள் கையை விட்டார். அப்போது அவரது கையில் பாம்பு கடித்தது.

    இதில் உயிருக்கு ஆபத் தான நிலையில் இருந்த பொன் ராணியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சாத்தான் குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×