search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கங்கை கொண்டான் அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது

    கங்கை கொண்டான் அருகே மோட்டார்சைக்கிளில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது36). ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் மாரிதுரை (38). இவர்கள் 2 பேரும், கங்கை கொண்டான் பகுதியில் உள்ள சிற்றாற்று மணலை திருடி, 4 சாக்கு மூட்டைகளில் கட்டி 2 மோட்டார் சைக்கிள்களில் வைத்து அடிக்கடி கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அவர்கள் மோட்டார் சைக்கிளில் 4 மூட்டை ஆற்று மணலை கடத்தி சென்ற போது, கங்கைகொண்டான் போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மணல் மூட்டைகளையும், 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×