search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போடி அருகே பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்திய ரவுடிகள் கைது

    போடி அருகே பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்திய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள குரங்கணி டாப் ஸ்டேசன் பகுதியில் கடந்த சில மாதங்களாக சிலர் மக்களை மிரட்டி பணம் பறித்து வந்தனர். சசிகுமார் (வயது29) என்பவர் தலைமையில் செயல்பட்டு வந்த இவர்கள் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு போன்றவற்றிலும் செயல்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனுக்கள் அளித்திருந்தனர்.

    இந்நிலையில் அந்த கும்பல் அதே பகுதியைச் சேர்ந்த குதிரை வண்டி தொழிலாளி மணிகண்டன் (26) என்பவரை கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்து போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமார், டேனியல், மணி, அமல்ராஜ், அரவிந்தன் ஆகிய 5 பேர்களையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். சிறையில் இருந்து வெளி வந்தபின் மீண்டும் அவர்கள் மக்களை மிரட்டாமல் இருக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×