என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போடி அருகே பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்திய ரவுடிகள் கைது
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே உள்ள குரங்கணி டாப் ஸ்டேசன் பகுதியில் கடந்த சில மாதங்களாக சிலர் மக்களை மிரட்டி பணம் பறித்து வந்தனர். சசிகுமார் (வயது29) என்பவர் தலைமையில் செயல்பட்டு வந்த இவர்கள் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு போன்றவற்றிலும் செயல்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனுக்கள் அளித்திருந்தனர்.
இந்நிலையில் அந்த கும்பல் அதே பகுதியைச் சேர்ந்த குதிரை வண்டி தொழிலாளி மணிகண்டன் (26) என்பவரை கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்து போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமார், டேனியல், மணி, அமல்ராஜ், அரவிந்தன் ஆகிய 5 பேர்களையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். சிறையில் இருந்து வெளி வந்தபின் மீண்டும் அவர்கள் மக்களை மிரட்டாமல் இருக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்