search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் தலையில் குழாய் விழுந்து தொழிலாளி பலி

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் தலையில் குழாய் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வட சென்னை அனல்மின் நிலையத்தின் 3-வதுநிலை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்னாத்ராம் வேலை செய்து வந்தார். அங்கு கிரேன் மூலம் ராட்சத பைப்புகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

    அப்போது அருகில் நின்று கொண்டிருந்த சிவ்னாத்ராம் தலை மீது ராட்சத குழாய் விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் பலியானார்.

    Next Story
    ×