என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘நீட்’ தேர்வு பற்றி பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி கிடையாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ
Byமாலை மலர்22 July 2019 2:06 AM GMT (Updated: 22 July 2019 2:06 AM GMT)
நீட் தேர்வு பற்றி பேச தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி :
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை இருவழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. திருச்செந்தூர்-நெல்லை சாலையில் செய்துங்கநல்லூர் வரை ரூ.37 கோடியில் இருவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
‘நீட்‘ தேர்வு தேவையில்லை என்பது தான் அரசின் கருத்தாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த கருத்து சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘நீட்‘ தேர்வில் விலக்கு பெற கடைசி வரை போராடிய நேரத்தில் தான் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அந்த தடை வாங்குவதற்கு காரணம் தமிழகத்தை சேர்ந்த நளினி சிதம்பரம் தான்.
அவர் அன்று தலையிட்டு வாதிடாமல் இருந்திருந்தால் ‘நீட்‘ தேர்வுக்கு விலக்கு கிடைத்திருக்கும். எனவே ‘நீட்‘ தேர்வை பற்றி பேசுவதற்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி கிடையாது. எங்களுடைய கொள்கை ‘நீட்‘ வேண்டாம் என்பது தான். அதற்காக இன்று வரை தடை பெற போராடிக்கொண்டு தான் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை இருவழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. திருச்செந்தூர்-நெல்லை சாலையில் செய்துங்கநல்லூர் வரை ரூ.37 கோடியில் இருவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
‘நீட்‘ தேர்வு தேவையில்லை என்பது தான் அரசின் கருத்தாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த கருத்து சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘நீட்‘ தேர்வில் விலக்கு பெற கடைசி வரை போராடிய நேரத்தில் தான் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அந்த தடை வாங்குவதற்கு காரணம் தமிழகத்தை சேர்ந்த நளினி சிதம்பரம் தான்.
அவர் அன்று தலையிட்டு வாதிடாமல் இருந்திருந்தால் ‘நீட்‘ தேர்வுக்கு விலக்கு கிடைத்திருக்கும். எனவே ‘நீட்‘ தேர்வை பற்றி பேசுவதற்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி கிடையாது. எங்களுடைய கொள்கை ‘நீட்‘ வேண்டாம் என்பது தான். அதற்காக இன்று வரை தடை பெற போராடிக்கொண்டு தான் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X