என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாசரேத்தில் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்21 July 2019 3:16 PM GMT (Updated: 21 July 2019 3:16 PM GMT)
நாசரேத்தில் திருமணம் முடிந்து 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாசரேத்:
நாசரேத் மோசஸ் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் (வயது35). இவரது மனைவி மாரி மகேஸ்வரி (32). இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் மாரி மகேஸ்வரி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசரேத் போலீசார் மாரி மகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாரி மகேஸ்வரியின் அண்ணன் குமாரவேல் தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தயாளந் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X