என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குமரி மாவட்டத்தில் சூறை காற்றுடன் சாரல் மழை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் பெய்யத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக பெய்யத் தொடங்கியது. சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. பின்னர் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது.
முள்ளங்கினாவிளை, பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, குலசேகரம், மார்த்தாண்டம் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கு அதிகபட்சமாக 10 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
தொடர் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு சாரல் மழையும் பெய்து வருவதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது.
விடுமுறை தினமான இன்று திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் குடும்பத்தோடு ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வரு கிறது. அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் தோவாளை, அனந்தனாறு, புத்தனாறு சானல்களில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் அகஸ்தீஸ்வரம், ஈச்சன்விளை, கண்டன் விளை, தடிக்காரன் கோணம் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்வயர்களும் அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் தடைபட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்