என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேவாரம் போலீஸ் நிலையம் எதிரே மளிகை கடையில் கொள்ளை
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் போலீஸ் நிலையம் எதிரே சிவனேசன் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் வியாபாரம் முடிந்ததும் பணத்தை எடுக்காமல் கல்லாபட்டியிலேயே வைத்து விட்டு பூட்டி சென்றார். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
கடையில் இருந்த பொருட்கள் மற்றும் பணம் ரூ.40 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த சிவனேசன் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மெயின்ரோடு பகுதியில் போலீஸ் நிலையம் அருகேயே கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்