search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    தேவாரம் போலீஸ் நிலையம் எதிரே மளிகை கடையில் கொள்ளை

    தேவாரம் போலீஸ் நிலையம் எதிரே மளிகை கடையில் பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் போலீஸ் நிலையம் எதிரே சிவனேசன் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் வியாபாரம் முடிந்ததும் பணத்தை எடுக்காமல் கல்லாபட்டியிலேயே வைத்து விட்டு பூட்டி சென்றார். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

    கடையில் இருந்த பொருட்கள் மற்றும் பணம் ரூ.40 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த சிவனேசன் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மெயின்ரோடு பகுதியில் போலீஸ் நிலையம் அருகேயே கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×