என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே பஸ் உரிமையாளர் திடீர் மாயம்
Byமாலை மலர்21 July 2019 12:54 PM GMT (Updated: 21 July 2019 12:54 PM GMT)
தேனி அருகே பஸ் உரிமையாளர் திடீரென்று மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேனி:
தேனி அருகே உள்ள தென்கரையை அடுத்த லெட்சுமிபுரம் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் சஞ்சை (வயது 30). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. இவர் பெரியகுளத்தில் இருந்து குமுளி செல்லும் தனியார் பஸ்சை சொந்தமாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது பஸ்சை மதுரையைச் சேர்ந்த மற்றொரு பஸ் உரிமையாளர் விலைக்கு கேட்டாராம். அதற்கு சஞ்சை மறுத்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த சஞ்சையை திடீரென காணவில்லை. அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது பற்றி சஞ்சையின் தாய் சுஜாதா தென்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சஞ்சை எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரும் கடத்தி சென்றர்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X