என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் 2 வீடுகளின் கதவை உடைத்து 14 பவுன்-ரூ.1 லட்சம் கொள்ளை
மதுரை:
மதுரை தல்லாகுளம் மீனாட்சியம்மன் நகரைச் சேர்ந்தவர் முத்துவேல் (வயது45). தனியார் பஸ் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார்.
சம்பவத்தன்று இரவு இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த 7 பவுன் தங்க சங்கிலி, 1 பவுன் மோதிரம் மற்றும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் முத்துவேல் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை தல்லாகுளம் செல்வ விநாயகர் நகரைச் சேர்ந்தவர் சாந்தாராம் (வயது64). இவர் சென்னையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மதுரை வந்த அவர் வீட்டில் படுத்திருந்தபோது காற்றுக்காக கதவை திறந்துவைத் திருந்தார்.
இதை பயன்படுத்தி யாரோ மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த 6 பவுன் தங்க சங்கிலியை திருடிச்சென்றனர்.
இதுகுறித்தும் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்