என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் சேவைகள் ரத்து
Byமாலை மலர்21 July 2019 2:16 AM GMT (Updated: 21 July 2019 2:16 AM GMT)
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று குறிப்பிட்ட நேரத்தில் சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 36 ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதனால், காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும்.
இதேபோல், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பராமரிப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கும் நேரத்தில் கூடுதலாக 8 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X