என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்காரப்பேட்டை அருகே பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை
Byமாலை மலர்20 July 2019 12:32 PM GMT (Updated: 20 July 2019 12:32 PM GMT)
சிங்காரப்பேட்டை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்துள்ள மாங்காய்பட்டி பகுதியை சேர்ந்தவர் இலங்காளி. இவரது மனைவி சாமந்தி (வயது35). இவர் மாரண்டஅள்ளி பகுதிக்கு புது வாழ்வு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வயிற்று வலி காரணமாக சாமந்தி அவதிப்பட்டு வந்தார். இதனால் சாமந்தி தனது தாய் வீடான கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையை அடுத்துள்ள நல்லவன்பட்டி கிராமத்திற்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சாமந்தி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை சாமந்தி பரி தாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X