search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சின்னமனூரில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

    சின்னமனூரில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் புலிக்குத்தி மேற்குத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மனைவி ஆதிலெட்சுமி (வயது 27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடமாக இவருக்கு வயிற்று வலி இருந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆதி லெட்சுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சின்னமனூர் அருகே உள்ள பாலார்பட்டி நடுத் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் ரவிச்சந்திரன் (வயது 29). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் கீழப்பூலாநந்தபுரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பிராந்தியில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல்-உதவி சிகிச்சை பெற்று பின்னர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×