search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன் பேட்டி

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை. தமிழை வளர்க்கும் முயற்சியில் நாங்களும் ஈடுபடுகிறோம். தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதாக மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றார்.

    முன்னதாக, சென்னையில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

    சூட்கேஸ்கள் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடியது. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில்தான் நிதி பட்ஜெட் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது. மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், சூட்கேஸ் போன்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.



    தஞ்சாவூர் கோவில் போல தென்கிழக்கு ஆசியாவில் பல கோவில்கள் பிரமாண்டமாக இருக்கிறது. அதனுடைய சிற்பக்கலைகள் பாராட்டத்தக்கது. தொழில் முனைவோர்களை உருவாக்கவும், தொழில்களை பெருக்கிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை கண்டிப்பாக மத்திய அரசு எடுக்கும்.

    கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையின்போது இந்தியர்கள் தான் மற்ற நாட்டினருக்கு குருவாக இருப்பார்கள் என தெரிவித்தார்.
    Next Story
    ×