என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் 5 பேர் காயம்
Byமாலை மலர்19 July 2019 2:42 PM GMT (Updated: 19 July 2019 2:42 PM GMT)
கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.
பாகூர்:
கடலூர் அருகே பெரிய கங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது31). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இவர் தனது மனைவி மற்றும் உறவினரின் 4 வயது குழந்தையான காரூண்யன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் முள்ளோடை-பரிக்கல்பட்டு ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது இவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே கண்டமங்கலம் அருகே பள்ளிதென்னல் கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ரஞ்சித்குமார், குழந்தை காரூண்யன் மற்றும் கமலக் கண்ணன் அவருடன் வந்த அவரது மகன், மகள் உள்ளிட்ட 5 பேரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X