என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கரன்கோவிலில் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்19 July 2019 2:08 PM GMT (Updated: 19 July 2019 2:08 PM GMT)
சங்கரன்கோவிலில் வேலைக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தேவி பட்டணம் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 51). இவரது மகள் முப்பிடாதி (21). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள முப்பிடாதி அங்குள்ள தறிசெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். வெளியே சென்றிருந்த பழனி இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது முப்பிடாதி வீட்டில் இல்லை.
சிறிது நேரத்தில் வந்து விடுவார் என நினைத்த பழனி மகளை தேடாமல் இருந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்தவர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
இதையடுத்து தனது மகள் காணாமல் போனது குறித்து சங்கரன்கோவில் டவுண் போலீசில் பழனி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X