search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    வல்லம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    தஞ்சை அடுத்த வல்லம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வல்லம்:

    தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள மருங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரவேல் மகன் பாஸ்கர் (வயது21). இவர் வல்லம் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு இளம்பெண்ணுடன் பாஸ்கர் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அப்பெண் வாலிபர் பாஸ்கரிடம் பேசுவதை தவிர்த்ததால் மனமுடைந்த பாஸ்கர் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து மயங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் நேற்று இறந்தார்.

    இதுகுறித்து சுந்தரவேல் வல்லம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×