என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- கட்டிட தொழிலாளி கைது
Byமாலை மலர்19 July 2019 10:37 AM GMT (Updated: 19 July 2019 10:37 AM GMT)
மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது48), கட்டிட தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் மட்டும் இருந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் 15, 12 வயதுடைய 2 பேர் அங்கு விளையாடி கொண்டிருந்தனர். 2 பேரையும் அலுவலகத்துக்கு அழைத்த சுரேஷ், பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் அவரிடம் இருந்து தப்பி தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தந்தையிடம் தெரிவித்தனர். அதற்குள் அலுவலகத்திற்குள் இருந்த சுரேஷ் அங்கிருந்து தப்பினார்.
சிறுமியின் தந்தை தனது ஆதரவாளர்களுடன் தனிச்சியத்திற்கு சென்றார். அங்கிருந்த சுரேசை காரில் கடத்தி சம்மட்டிபுரத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியின் தந்தை மற்றும் சிலர் சுரேசை கொடூரமாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடம் வந்து சுரேசை மீட்டனர்.
சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சிறுமிகளின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது48), கட்டிட தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் மட்டும் இருந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் 15, 12 வயதுடைய 2 பேர் அங்கு விளையாடி கொண்டிருந்தனர். 2 பேரையும் அலுவலகத்துக்கு அழைத்த சுரேஷ், பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் அவரிடம் இருந்து தப்பி தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தந்தையிடம் தெரிவித்தனர். அதற்குள் அலுவலகத்திற்குள் இருந்த சுரேஷ் அங்கிருந்து தப்பினார்.
சிறுமியின் தந்தை தனது ஆதரவாளர்களுடன் தனிச்சியத்திற்கு சென்றார். அங்கிருந்த சுரேசை காரில் கடத்தி சம்மட்டிபுரத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியின் தந்தை மற்றும் சிலர் சுரேசை கொடூரமாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடம் வந்து சுரேசை மீட்டனர்.
சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சிறுமிகளின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X