என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண் ஊழியர் புகார் எதிரொலி - பந்தலூர் நீதிபதி ‘சஸ்பெண்டு’
Byமாலை மலர்19 July 2019 4:56 AM GMT (Updated: 19 July 2019 4:56 AM GMT)
கோர்ட்டில் வேலை பார்த்த பெண் ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் பந்தலூர் நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவராக பணியாற்றி வருபவர் செந்தில் முரளி. இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பந்தலூரில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். செந்தில் முரளி கடந்த 2 வருடங்களுக்கு முன் காங்கயம் நீதி மன்றத்தில் பணியாற்றியபோது ஊழியர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் கோர்ட்டில் வேலை பார்த்த பெண் ஊழியர் ஒருவர் நீதிபதி செந்தில் முரளி தன்னை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், தாக்கியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் கடந்த 2 வருடங்களாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணையில் செந்தில் முரளி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அவரை சஸ்பெண்டு செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில் முரளியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவராக பணியாற்றி வருபவர் செந்தில் முரளி. இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பந்தலூரில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். செந்தில் முரளி கடந்த 2 வருடங்களுக்கு முன் காங்கயம் நீதி மன்றத்தில் பணியாற்றியபோது ஊழியர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் கோர்ட்டில் வேலை பார்த்த பெண் ஊழியர் ஒருவர் நீதிபதி செந்தில் முரளி தன்னை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், தாக்கியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் கடந்த 2 வருடங்களாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணையில் செந்தில் முரளி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அவரை சஸ்பெண்டு செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில் முரளியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X