search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்குதல்
    X
    மின்சாரம் தாக்குதல்

    அப்டா மார்க்கெட்டில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி

    நாகர்கோவில் அருகே அப்டா மார்க்கெட்டில் மின்சாரம் தாக்கி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    தக்கலையை அடுத்த அழகியபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 60).

    இவர், வடசேரி அப்டா மார்க்கெட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று அவர் மார்க்கெட்டில் உள்ள ஜெனரேட்டர் அறைக்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

    இதில், தூக்கி வீசப்பட்டு ராஜ்குமார், படுகாயம் அடைந்தார். இதில் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். படுகாயம் அடைந்த ராஜ்குமாரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்- இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×