search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கூடங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    கூடங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    கரூர் மாவட்டம் குப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது22), ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவர்கள் இருவரும் கூடங்குளம் பகுதியில் உள்ள ஒரு மீன் கம்பெனியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இவர்கள் மோட்டார் சைக்கிளில் கூடங்குளம் அருகே சென்றபோது விபத்தில் சிக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விவேகானந்தன் பலியானார்.

    செல்வனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    Next Story
    ×